ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டி – இலங்கை வெற்றி

ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று 2-வது போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 44.4 ஓவரில் 208 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் கிரேக் எர்வின் அதிகபட்சமாக 82 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் தீக்சனா 4 விக்கெட் சாய்த்தார்.

பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் இலங்கை அணி வெற்றிக்காக கடைசி வரை போராட வேண்டியிருந்தது. ஜனித் லியானகே 95 ரன்கள் அடிக்க 49 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3-வது மற்றும் கடைசி போட்டி நாளைமறுதினம் நடைபெறுகிறது. இதில் இலங்கை வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports