Tamilசெய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார்

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார்.

தமிழகத்தில் 5 நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை முதலமைச்சர் முக ஸ்டாலின், கவர்னர் வரவேற்றனர். குடியரசுத் தலைவர் வருகையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.