Tamilசெய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த சோனியா காந்தி

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் 25-ம் தேதி பதவியேற்றார்.

இதற்கிடையே, ஜனாதிபதியாக பதவியேற்ற திரவுபதி முர்முவை மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இருவரும் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மாளிகை, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்துள்ளது.