சோனியா தலைமையில் டெல்லியில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து

பாராளுமன்ற தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார்.

இதற்கிடையே, தேர்தலில் பெற்ற தோல்வி குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் பங்கேற்க முடியாததால் இன்று மாலை நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகின.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools