Tamilவிளையாட்டு

சையத் முஷ்டாக் அலி டிராபி – டெல்லியை வீழ்த்தி ஜம்மு-காஷ்மீர் வெற்றி

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் சூரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி – ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராணா 30 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 55 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜம்மு-காஷ்மீர் அணியின் கஜுரியா- வாத்வான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கஜுரியா 22 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 49 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த மன்சூர் டார் 24 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்கள் குவித்தார்.

வாத்வான் ஆட்டமிழக்காமல் 38 பந்தில் 48 ரன்கள் அடிக்க ஜம்மு-காஷ்மீர் 15.5 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *