கீழ்ப்பாக்கம் நீர் வினியோகக் கட்டடம்

ஒரு நாகரிகத்தின் உயிர்வாழ்விற்கான மிக முக்கியமான தேவைகளில் ஒன்று நிலையான நீர் வழங்கல் ஆகும்.

போர் மற்றும் நோய் காரணமாக மெட்ராஸ் நகர மக்கள் அதை விட்டுச் சில சந்தர்ப்பங்களில் வெளியேறியிருக்கின்றனர். ஆனால் தண்ணீர்ப் பற்றாக்குறையால் அவர்கள் ஒருபோதும் புலம் பெயர்ந்ததில்லை. இயற்கையான நன்னீர் ஆதாரங்கள் முற்றிலும் இல்லாத மெட்ராஸ் நகரத்தில் அது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் பாரம்பரியமாக நிரந்தரத் தண்ணீர்ப் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகிறது. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். பிரான்சிஸ் டே தனது கோட்டைக்குத் தேர்ந்தெடுத்த இடம் மிகக் குறைவான குடிநீர் ஆதாரங்களைக் கொண்டிருந்தது. முக்கியமாக அதையொட்டி வற்றாத ஆறுகள் ஏதும் இல்லை.

View more in kizhakkutoday.in

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: Chennai 360