சென்னை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற விராட் கோலி

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 199 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது ஓவரின் 2-வது பந்தை மார்ஷ் அடித்த போது, பந்தில் ஸ்லிப் திசையில் சீறிச் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விராட் கோலி டைவ் அடித்து பிடித்தார். மேலும் ஒரு கேட்ச் பிடித்தார்.

போட்டியில் இந்தியாவின் பீல்டிங் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரருக்கு இந்திய அணி சார்பில் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலிக்கு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப் தங்கப் பதக்கம் வழங்கினார். அவரை சக வீரர்கள் பாராட்ட, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது போல் விராட் கோலி, போஸ் கொடுத்து அசத்தினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports