Tamilசெய்திகள்

சென்னை அச்சுறுத்தும் கொரோனா! – ராயபுரத்தில் 676 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 676 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திரு.வி.க.நகரில் 556 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 630 பேருக்கும், அண்ணாநகரில் 301 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 274 பேரும், தேனாம்பேட்டையில் 412 பேரும், திருவொற்றியூரில் 84 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 319 பேருக்கும், பெருங்குடியில் 36 பேருக்கும், அடையாறில் 175 பேருக்கும், அம்பத்தூரில் 205 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 29 பேருக்கும், மாதவரத்தில் 54 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 28 பேருக்கும், மணலியில் 42 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *