சென்னையில் ராணுவ வீரர் சுட்டுக்கொலை

சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் பிரவீன் குமாருக்கும் அவருக்கு கீழ் பணியாற்றிய ரைபிள் மேன் ஜெக்ஷீர் தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த ரைபிள் மேன் இன்று அதிகாலை 3 மணிக்கு ஹவில்தாரின் அறைக்கு சென்று உள்ளார். அங்கு தூங்கிக் கொண்டு இருந்த ஹவில்தாரை ரைபிள் மேன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உள்ளார். பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools