Tamilசினிமா

சூர்யா மீது தொடர்ந்து புகார் கூறி வரும் மீரா மிதுன்

தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் திரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல் ரஜினி, விஜய், தனுஷ் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

அண்மையில் நடிகர் சூர்யா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த மீரா மிதுன், அதில் சூர்யாவுக்கு நடிக்கவே தெரியாது. சாதாரண காட்சிக்கு கூட 20 டேக் வாங்குவார். ஆக்டிங்கிற்கு என்ன ஸ்பெல்லிங் என கேட்பவர் என சூர்யாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் சூர்யா, விஜய் ரசிகர்கள் தன்னை தொடர்ந்து போனில் மிரட்டி வருவதாக மீரா மிதுன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது: சூர்யா, விஜய் ரசிகர்களிடம் இருந்து, மோசமான மெசேஜ்கள், மொபைல் அழைப்புகள், கற்பழிப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்கள் வருகின்றன.

உங்கள் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ இதுபோல் நடந்தால் ஏற்பீர்களா. 80க்கும் மேற்பட்ட எண்களில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. என் மொபைல் எண்ணை, பல்வேறு குழுக்களுக்கு பரவ விட்டுள்ளனர். எனக்கு ஏதாவது நடந்தால், சூர்யா தான் பொறுப்பு. இது என்னை உறுதியற்ற நிலைக்கு துாண்டுகிறது. என அவர் கூறியுள்ளார்.

நடிகை மீரா மிதுன், சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *