Tamilசெய்திகள்

சீனா நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 14 பேர் பலி

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குய்ஷோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில் இன்று அதிகாலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதியில் எரிவாயு கசிந்து திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள், இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்ததனர். மேலும் 2 பேர் சுரங்கத்தினுள் சிக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *