X

சிக்கிம் நிலச்சரிவு – 1200 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு

சிக்கிம் மாநிலத்தின் மாங்கன் மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை கொட்டியது. இடைவிடாது பெய்த கனமழையால் மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன

இந்த நிலச்சரிவுகளால் சுற்றுலா தலங்களுக்கு பெயர்பெற்ற மாங்கன் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. அந்த மாவட்டத்தின் டிசோங்கு, சுங்தாங், லாச்சென் மற்றும் லாச்சுங் ஆகிய நகரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அங்கு 1,200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியிருந்தனர்.

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாங்கன் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சிக்கிம் நிலச்சரிவுகளில் சிக்கி 9 பேர் பலியாகினர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக்குழு குவிக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், சிக்கிம் நிலச்சரிவில் சிக்கியிருந்த 1,200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்று கடைசி கட்டமாக சிக்கியிருந்த 150 சுற்றுலா பயணிகளை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.