Tamilசினிமா

சல்மான் கானுக்காக எழுதப்பட்ட கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளை வென்ற இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பும் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானை மனதில் வைத்து தான் இந்தப் படத்தின் கதையை இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் எழுதியிருந்தாராம். கதை சல்மான் கானுக்கு பிடித்திருந்தாலும், படத்தில் கமர்ஷியல் அம்சங்கள் குறைவாக இருந்ததால் அவர் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் அந்த வாய்ப்பு நடிகர் விஜய் சேதுபதிக்கு சென்றதாம்.