Tamilசெய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு – மக்கள் அதிர்ச்சி

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதியன்று விலை மாற்றப்படாமல் இருந்த நிலையில் ரூ.610 லிருந்து ரூ.660 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

3 மாதங்களாக சிலிண்டர் விலை ரூ.610 ஆக தொடர்ந்த நிலையில் ரூ.50 அதிகரித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.