Tamilசினிமா

சமந்தாவுக்கு நாக சைதன்யா ரசிகர்கள் திடீர் எதிர்ப்பு

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி திரைப்படத்தில் அறிமுகமானவர் சமந்தா. விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையானார். சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாத சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமந்தா 2 நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், செல்ல நாயின் படத்தை வெளியிட்டார்.

அந்த நாயின் கழுத்தில் ‘நெம்பர் 1 ஹஸ்பண்ட் ‘என்று எழுதிய பேட்ச் அணிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நாக சைதன்யாவின் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். கணவர் நாகசைதன்யாவை சமந்தா அவமதித்து விட்டார் என்று விமர்சித்து வருகின்றனர். பொது வெளியில் கணவரை பற்றி மரியாதையாக பேச கற்றுக் கொள்ளுங்கள் என்று சமந்தாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *