Tamilசெய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல – மகர விளக்கு சீசன் முதல் 2023-ம் ஆண்டு மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள் விவரம் வருமாறு:-

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (புதன்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். 20-ந் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

பின்னர் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ந் தேதி நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைக்கு பின்னர் 17-ந் தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14-ந்தேதி நடை திறக்கப்பட்டு 19-ந்தேதி அடைக்கப்படும். அதைத்தொடர்ந்து பங்குனி ஆராட்டு விழாவை முன்னிட்டு மார்ச் 26-ந் தேதி நடை திறக்கப்படும். 27-ந் தேதி காலை 9 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். ஏப்ரல் 5-ந் தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும். சித்திரை மாத பூஜைக்காக ஏப்ரல் 11-ந் தேதி நடை திறக்கப்படும். 15-ந் தேதி விஷு பண்டிகை சிறப்பு பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து 19-ந் தேதி நடை அடைக்கப்படும்.

வைகாசி மாத பூஜைக்காக மே மாதம் 14-ந்தேதி நடை திறக்கப்பட்டு, 19-ந்தேதி அடைக்கப்படும். பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு மே 29-ந் தேதி நடை திறக்கப்படும். 30-ந்தேதி பிரதிஷ்டை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆனி மாத பூஜைக்காக ஜூன் 15-ந் தேதி நடை திறக்கப்பட்டு 20-ந் தேதி அடைக்கப்படும். ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16-ந்தேதி நடை திறக்கப்பட்டு 21-ந்தேதி அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி அடைக்கப்படும்.

ஒணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக ஆகஸ்டு 27-ந் தேதி நடை திறக்கப்பட்டு 31-ந் தேதி அடைக்கப்படும். புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17-ந் தேதி நடை திறக்கப்பட்டு 22-ந்தேதி அடைக்கப்படும். ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ந் தேதி நடை திறக்கப்பட்டு 22 -ந் தேதி அடைக்கப்படும். சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி, நவம்பர் 10 -ந்தேதி நடை திறக்கப்படும். 11-ந்தேதி சிறப்பு பூஜைகளுக்கு பின் நடை அடைக்கப்படும். பின்னர் 2023-ம் ஆண்டுக்கான மண்டல சீசன் நவம்பர் 16-ந்தேதி தொடங்கிநடைபெறும்.