சந்தானத்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

சந்தானம் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகியுள்ளது. சர்வர் சுந்தரம், பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு-3 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

ஜான்சன்.கே கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து சென்ற வருடம் வெளியான படம் ‘ஏ1’. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இந்த கூட்டணி புதிய படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் தயாரிக்கும் இந்த படத்தில் சந்தானம் தாதாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools