Tamilசெய்திகள்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல வரும் 27 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 27-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.