Tamilவிளையாட்டு

சஞ்சு சாம்சன் ஆடும் லெவன் அணியில் தேர்வு செய்யப்படாது ஏன்? – கேப்டன் ஷிகர் தவான் விளக்கம்

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக அந்த மழை போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இ

தனால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதனால் வரும் 30ஆம் தேதி நடைபெறும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும். ஒருவேளை அந்த போட்டியும் மழையால் கைவிடப்பட்டால் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றும்.

இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கேப்டன் தவானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, நாங்கள் 6வது பந்துவீச்சாளர் வேண்டும் என விரும்பினோம். அதனால் சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டார். ஹூடா அணிக்குள் வந்தார். மேலும், சாஹர் இரு திசைகளிலும் பந்தை ஸ்விங் செய்வதில் திறமையானவர் என்பதால் அவரை அணிக்குள் எடுத்தோம் என்றார்.