Tamilவிளையாட்டு

கொரோனா முடிவு பள்ளி தேர்வு முடிவு போல இருக்கிறது – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் கருத்து

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.

வீரர்கள் துபாய்க்கு புறப்படுவற்கு முன்பும், துபாய் சென்ற பிறகும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நெகட்டிவ் முடிவு வந்தால் மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடிவும் என்ற நிலைக்கு வீரர்கள் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் கொரேனா பரிசோதனை அரசுத் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பது போன்ற உணர்வை அளித்தது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘அணி மானேஜர் நாளை காலை கொரோனா பரிசோதனை முடிவு வரும் எனக்கூறும்போது, எங்களுக்கு கவலையாக இருக்கும். அது பள்ளி அரசுத் தேர்வு முடிவுக்கு காத்திருப்பதுபோல் உணர்ந்தேன்.

அறைக்குள் இருப்பது எளிதான காரியம் அல்ல. வெப்பம் அதிகமான இருந்தது. ஆனால், ஓட்டல் அறையில் ஏ.சி. இருந்ததால், எல்லா நேரமும் அதை பயன்படுத்திக் கொண்டேன். இரண்டு செசன் பயிற்சிக்குப்பின் என்னுடைய ரிதம் மெதுவாக திரும்புகிறது. ஆனால், உறுதியாக திரும்பிவிடும்.

பேட்டிங்கின் தீவிரத்தை வலைப்பயிற்சியிலும், ஆட்டத்திலும் பார்க்க முடியும். பேட்ஸ்மேன்கள் பந்தை விளாசினர். வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தை வெளிப்படுத்தினர். சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களுடைய டிரிக்கை பெற்றனர். கிரிக்கெட் விளையாட ஓய்வு நேரம், நாங்கள் கிரிக்கெட்டை எப்படி விரும்புகிறோம் என்பதை உணர வைத்தது’’ என்றார்.