Tamilவிளையாட்டு

கொரோனா நிதிக்காக ரூ.30 கோடி நன்கொடை வழங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி உரிமையாளர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினந்தோறும் பாதிப்பு 4 லட்சத்தை தொட்ட வண்ணம் உள்ளதால் ஆக்சிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.

இதனால் வெளிநாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், பிரபலங்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் ஐபிஎல் போட்டியில விளையாடும் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் உரிமையாளரான சன் டிவி நெட்வொர்க் கொரோனாவை எதிர்கொள்ள 30 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.

மத்திய அரசு, மற்றும் மாநில அரசுகள், என்ஜிஓ போன்றவற்றால் நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இந்த பணம் நன்கொடையாக வழங்கபடுகிறது எனத் தெரிவித்துள்ளது.