கொரோனா அச்சம் – ஐபிஎல் போட்டி நடத்த டெல்லி அரசு அனுமதி மறுப்பு

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. நீச்சல் குளம், திரையரங்குகள் உள்பட மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் மூட உத்தரவிட்ட டெல்லி அரசு, தற்போது ஐபிஎல் போட்டியை நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனால் டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்பில்லை.

மத்திய அரசு சார்பில் கட்டாயம் போட்டியை நடத்த வேண்டியிருந்தால், ரசிகர்களை அனுமதிக்காமல் போட்டியை நடத்தலாம் என அறிவித்திருந்தது.

29-ந்தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சொந்த மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை மார்ச் 30-ந்தேதி சந்திக்க இருந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news