கைதி தப்பியோட்டம் – ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

கோவை மத்திய சிறையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி லெனின் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தப்பியோடினார். போக்சோ வழக்கு ஒன்றில், கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்ப அழைத்து வந்தபோது தப்பியோடினார்.

இந்த விவகாரத்தில், கோவை ஆயுதப்படை காவலர்கள் தனசேகர், பிரவீன், பவின் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி ஆயுதப்படை உதவி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கேரள மாநிலம் மேபாடி காவல் நிலையத்தில் கோவை ஆயுதப்படை போலீசார் புகார் அளித்ததை அடுத்து, தப்பியோடிய கைதியை இருமாநில போலீசாரும் தேடி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools