Tamilவிளையாட்டு

கே.கே.ஆர் ஐபில் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்

கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனை கேகேஆர் அறிவித்துள்ளது.

அதன்படி கேகேஆர் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக 2023-ம் ஆண்டு ஐயர் விளையாடவில்லை. அதனால் அந்த சீசன் முழுவதும் கேப்டனாக நிதிஷ் ராணா செயல்பட்டார்.

காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பிடிக்காத ஐயர், 2023-ம் ஆண்டு நடந்த ஆசியக் கோப்பையில் களமிறங்கினார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 2023 உலகக் கோப்பையிலும் அவர் இடம் பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிலையில் மீண்டும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.