Tamilவிளையாட்டு

கேல் ரத்னா விருதுக்கு அஸ்வின், மிதாலிராஜ் பெயர்கள் பரிந்துரை

விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதாகும்.

இந்த ஆண்டுக்கான கேல்ரத்னா விருதுக்கு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரும், தமிழக கிரிக்கெட் வீரருமான அஸ்வின் மற்றும் வீராங்கனை மிதாலிராஜ் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த இருவரது பெயரையும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. மிதாலிராஜ் இந்திய பெண்கள் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக உள்ளார்.

இதே போல தவான், கே.எல்.ராகுல், பும்ரா ஆகியோரது பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.