குழந்தை பிறப்பு குறித்து கேட்டதால் கோபமடைந்த தீபிகா படுகோனே!

இந்தி நடிகை தீபிகா படுகோனேயும், நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியில் இருக்கும் லேக் கோமாவில் திருமணம் செய்து கொண்டனர். அவ்வப்போது கர்ப்பம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் தீபிகா, நான் கர்ப்பமானால், அதை மறைக்க முடியாது; ஒன்பது மாதமானால், நான் சொல்லாமலேயே என் உடம்பும், வயிறும் உங்களுக்கு காட்டி விடப்போகிறது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை; மறைக்கவும் வாய்ப்பில்லை என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், சபாக் இந்தி திரைப்படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் பிசியாக இருக்கும் தீபிகா படுகோனே, சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவரிடத்தில் கர்ப்பம் தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. இதனால் கடும் கோபம் அடைந்த தீபிகா படுகோனே கூறியதாவது:- நான் இப்போது கர்ப்பம் தரிக்கும் நிலையில் இல்லை. சினிமாவில் என்னுடைய முழு கவனமும் இருக்கிறது.

நானும், ரன்வீரும் சினிமாவில் நடிப்பதைதான் முழு நேர வேலையாக கொண்டிருக்கிறோம். குழந்தைகள் மீது எங்களுக்கு ஆர்வமும், பாசமும் உண்டு. எங்களுக்கும் குழந்தைகள் வேண்டும் தான். அதற்காக, நினைத்த நேரத்தில், குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. எப்போது, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமோ, அப்போது, முடிவெடுத்து செயல்படுவோம். அதை உங்களிடமும் தெரிவிக்கிறேன். அடுத்த ஒன்பதாவது மாதத்தில், நான் சொல்லவில்லை என்றாலும், அதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools