குரங்கு அம்மை நோய் பரவல் – கேரளா, டெல்லி விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்

வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயதான நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் மேலும் 2 பேருக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஐதராபாத் மற்றும் டெல்லியிலும் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுகாதார துறையினர் குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

மேலும் கேராளா மற்றும் டெல்லியில் உள்ள விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் வருவோரை கண்காணிக்கவும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools