Tamilசெய்திகள்

குடியரசு தின பாதுகாப்பு – டெல்லி செல்லும் ரெயில்களில் பார்சல் சேவை நிறுத்தம்

குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் கோவில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி செல்லும் அனைத்து ரெயில்களிலும் அனைத்து வகையான பார்சல் சேவைகளும் நாளை (23-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக முன் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் இந்திய ரெயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.