Tamilசெய்திகள்

கிரில் சிக்கன் சாப்பிடுவதால் புற்றுநோய் பாதிப்பு வருமா? – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எல்லா சீசனிலும் டாப் டிரெண்டிங் உணவுகளில் ஒன்றாக இருப்பது கிரில் சிக்கன். சில நாடுகளில் கோடை காலத்தில் விரும்பி சாப்பிடப்படும் உணவாக வறுக்கப்பட்ட கிரில் சிக்கன் (Grilled meat) இருந்து வருகிறது.

பல்வேறு உலக நாடுகளில் குக்அவுட்கள் மற்றும் பார்பிக்யூ, பர்கர்கள், ஹாட் டாக், ஸ்டீக்ஸ் மற்றும் சிக்கன் ஆகியவற்றை வார இறுதியில் கோடை உணவாக உள்ளன. நம் நாட்டில் சிறுவர்கள், இளைஞர்கள் என பெரும்பாலானோர் கிரில் சிக்கனை விரும்பு உண்கின்றனர். ஆனால் கிரில் சிக்கன் சாப்பிடுவதால் புற்றுநோய்க்கான ஆபத்து அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மிகச்சிறந்த சமையல் முறை உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாக இருக்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஹீட்டோரோசைக்ளிக் அமின்கள் அல்லது HAs மற்றும் பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் அல்லது PAHs ஆகியவை புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் ஆகும்.

வறுக்கப்பட்ட இறைச்சி எப்படி புற்றுநோயாக மாறுகிறது?

நீங்கள் அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது மற்றும் நேரடியாக தீயில் சமைக்கும்போது, இறைச்சியின் தோலில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உருவாகத் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவற்றில் இரண்டுதான் HCAகள் மற்றும் PAHக்கள். இவற்றை தொடர்ச்சியாக சாப்பிடும் போது பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இருப்பினும், எப்போதாவது பார்பிக்யூ செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இறைச்சியில் உள்ள அமினோ அமிலங்கள், சர்க்கரைகள் மற்றும் கிரியேட்டின் ஆகியவை உயர் வெப்பநிலையில் வினைபுரிந்து ஹீட்டோரோசைக்ளிக் அமின்களை உருவாக்குகின்றன. HA-கள் மற்றும் PAH-கள் பிறழ்ந்தவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. அவை உயிரணுக்களின் டிஎன்ஏவில் மாற்றங்களுக்கு வழிவகுத்து அவற்றை புற்றுநோயாக மாற்றும்.

வறுக்கப்பட்ட இறைச்சியில் புற்றுநோயைக் குறைக்கும் வழிகள்:

இறைச்சியை வறுப்பதற்கு முன் 20 நிமிடங்கள் ஊறவைப்பதால் ஹெட்டோரோசைக்ளிக் அமின்களின் உருவாக்கத்தை 90 சதவிகிதம் குறைக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, உணவுகள் குறைந்த வெப்பநிலையில் சமைக்கப்பட வேண்டும். ஆனால், நீண்ட நேரம் சமைக்க வேண்டும்.

ஒவ்வொரு உணவையும் அதற்கு ஏற்ற பக்குவத்தில் சமைத்து, சூடாகவே அதனை சாப்பிடுவது, சாப்பிடும் முறையில் அவசரம் இன்றி, உணவை முழுமையாக மென்று விழுங்குவது உள்ளிட்டவைகளை பின்பற்றினால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை பெருமளவுக்கு குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.