Tamilவிளையாட்டு

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜடேஜா!

ஐபிஎல் 15-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 4 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. தற்போதுவரை சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பில் இருந்து வெளியேறவில்லை.

இந்நிலையில், சென்னை அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கடந்த மே 8-ம் தேதி நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை .

காயத்திலிருந்து ஜடேஜா இன்னும் மீளாததால் அவர்  தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மீதமுள்ள போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகியது சென்னை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது .