காயத்தால் ஐபிஎலில் இருந்து விலகிய சென்னை அணி வீரர் கேதர் ஜாதவ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பந்தை தடுக்க பாய்ந்து விழுந்த போது (14-வது ஓவர்) இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார். வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக வெளியேறினார். அதன் பிறகு பீல்டிங் செய்ய வரவில்லை. காயத்தன்மை குறித்து அறிய இன்று ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அவரை பார்க்கும் போது, எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் (அதாவது பிளே-ஆப் சுற்றில்) விளையாட வாய்ப்பில்லை என்றே தோன்றுவதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நேற்றிரவு தெரிவித்தார். உலக கோப்பை போட்டி நெருங்குவதால் 34 வயதான கேதர் ஜாதவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news