கள்ள ஓட்டு போட ஒத்துழைத்த 10 தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 11-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

சித்தூர் மாவட்டம், சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் 5 வாக்குச்சாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். இது போல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் 2 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக தெலுங்கு தேசம் கட்சியினரும் புகார் அளித்தனர்.

இதையடுத்து, சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பாகாலா மண்டலம், புலிவருத்திப்பல்லி, ராமச்சந்திராபுரம் மண்டலம் என்.ஆர்.கம்மப்பல்லி, கொத்தகண்டிகை, கம்மப்பல்லி, வெங்கடராமாபுரம், கேலேபல்லி, குப்பம்பாதுரு ஆகிய 7 மையங்களில் கடந்த 19-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தநிலையில் முதல் கட்டமாக புலிவருத்தி பல்லி, என்.ஆர்.கம்மப்பல்லி, கொத்தகண்டிகை, கம்மப்பல்லி, வெங்கடராமாபுரம் ஆகிய 5 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட துணையாக இருந்ததாக அதிகாரிகள் முரளி கிருஷ்ணா, குணசேகர்ரெட்டி, செஞ்சய்யா, மகபூப்பாஷா, ஜானகிராம்ரெட்டி, மது, முரளிதர்ரெட்டி, ஸ்ரீதேவி, கங்காதரய்யா, வெங்கட்ரமணா மாதங்கி ஆகிய 10 பேரை சஸ்பெண்டு செய்து சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா உத்தரவிட்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools