Tamilசெய்திகள்

கள்ளச்சாராயம் விவகாரம் – கவர்னரை சந்தித்து மனு கொடுத்த அதிமுக

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி வரும் எடப்பாடி பழனிசாமி இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார்.

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும், எம்.பி.க்கள் 3 பேர் என அனைவரும் கவர்னரை சந்தித்தனர்.

கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக நேற்று அண்ணாமலை, கவர்னரை மனு அளித்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.