Tamilசெய்திகள்

கண்ணகி நகர் குடிசை வாரிய குடியிருப்பில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் 23 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *