Tamilசினிமா

கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை காஜல் அகர்வால்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக இவர் களரிப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

இவர் தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் காஜல் அகர்வாலுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கணவருடன் இணைந்து முதல்முறையாக திருப்பதியில் சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.