Tamilசினிமா

கடைசி வரை நடிப்பு தான் – வித்யா பாலன்

கேரளாவை பூர்வீகமாக கொண்ட வித்யா பாலன் தமிழில் அறிமுகமாக வேண்டியவர். இங்கே சிலர் நிராகரித்ததால் இந்திக்கு சென்று முன்னணி கதாநாயகியாகி விட்டார். சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- பொதுவாக திரையுலகில் இருக்கும் நடிகைகள் 26 வயதில் திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆகி விடுவார்கள். ஆனால் நானோ 26 வயதில் தான் சினிமா உலகிற்குள் நுழைந்தேன். அதனால் என்னுடைய திரை பயணம் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வரும் என்று ஆரம்பத்தில் நினைத்தேன்.

40 வயதுடைய நான் 14 வருடங்களாக திரை துறையில் இருக்கிறேன். என் வாழ் நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக நினைக்கிறேன். தற்போது நல்ல வாய்ப்புகள் அமைந்து சிறப்பாக செல்கிறது. இது வருங்காலங்களிலும் தொடரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *