கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்த 11 தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்தது!

இந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 11 மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட அவர்களிடம் இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools