ஒவ்வொரு கணமும் போராடுவேன் – கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் எக்ஸ் தளத்தில் பதிவு

ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழு மணி நேர விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். இதற்கிடையில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நேற்றிரவு கைது செய்யப்பட்டதும் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

இது ஒரு பிரேக். வாழ்க்கை ஒரு மிகப்பெரிய போர். ஒவ்வொரு கணமும் போராடுவேன். ஆனால், சமரசம் செய்ய மண்டியிடமாட்டேன். வெற்றியோ, தோல்வியோ நான் பயப்படமாட்டேன். நான் தோல்வியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news