ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி – சானியா, அங்கிதா ஜோடி தோல்வி

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி ஸ்பெயின் நாட்டின் சாரா சொர்ரிபெஸ் டோர்மோவை எதிர்கொண்டார்.

ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4-6, 6-3 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- அங்கிதா ஜோடி உக்ரைன் நாட்டின் நடியா கிச்சனோக்- லியுட்மைலா கிச்சனோக் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் சானியா ஜோடி முதல் செட்டில் அபாரமாக விளையாடியது. இதனால் 6-0 என முதல் செட்டை கைப்பற்றியது. 2-வது செட்டில் உக்ரைன் ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்திய ஜோடியும் பதிலடி கொடுத்தது. இதனால் செட்-பிரேக் வரை 2-வது சென்று இறுதியில் உக்ரைன் ஜோடி 6(7)- 6(0) என கைப்பற்றியது. 3-வது செட்டிலும் 8-10 என சானியா ஜோடி சரணடைந்து தோல்வியை தழுவியது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools