Tamilவிளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் செய்த சாதனையை முறியடித்தார் விராட் கோலி

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போலண்ட் பார்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 51 ரன்கள் எடுத்ததுடன், புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு வெளியே 5,065 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. இதனை விராட் கோலி இன்று முறியடித்துள்ளார்.

சரியாக விளையாடாமல் சொதப்பி வந்த கோலி, தற்போது படிப்படியாக பார்முக்கு திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் எம் எஸ் டோனி (4520), ராகுல் டிராவிட் (3998), சவுரவ் கங்குலி (3468) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.