Tamilவிளையாட்டு

ஐ.பி.எல் போட்டியில் அதிகம் முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மா

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதின. முதலில் மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2-வது பந்திலே ரோகித் சர்மாவை வெளியேற்றினார். சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து
ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார்.

இது ஐ.பி.எல். போட்டிகளில் ரோகித் சர்மாவின் 14-வது டக் அவுட்டாகும். இதன்மூலம் ஐ.பி.எல். தொடரில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா
படைத்துள்ளார்.