Tamilவிளையாட்டு

ஐ.பி.எல் கிரிக்கெட் – கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ்
வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிறகு 217 ரன்கள் குவித்தது.

துவக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக அடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 59 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்சர்களுடன் சதம் விளாசிய அவர், 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தேவ்தத் படிக்கல் 24 ரன்னும், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்னும் சேர்த்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹெட்மயர் 13 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2
விக்கெட் எடுத்தார். பேட் கம்மின்ஸ், ரஸ்ஸல், சிவம் மவி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 218 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் சுனில் நரேன் ரன் எதுவும் எடுக்காத நிலையில், ரன் அவுட்டானார்.

மற்றொரு வீரர் ஆரோன் பிஞ்ச் 28 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 51 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். ராணா 18 ரன்னுடன் வெளியேறினார்.

சிவம் மவி, பேட் கம்மின்ஸ் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய உமேஷ் யாதவ் 9 பந்துகளில் 21 ரன்கள் குவித்த
நிலையில் ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணி 19.4 ஓவர் முடிவில் 210 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

அந்த அணி சார்பில் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட்களை கைப்பற்றினார். ஓபேட் மெக்காய் 2 விக்கெட்களும், அஸ்வின், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டையும்
வீழ்த்தினர்.