Tamilவிளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஐதராபாத் அணி

 

கோவாவில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி – ஐதராபாத் எப்.சி. அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் போடவில்லை. 2வது பாதியில் கேரள வீரர் ராகுல் 68-வது நிமிடத்திலும், ஐதராபாத் வீரர் சஹில் தவோரா 88-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இதையடுத்து 1-1 என்ற கோல் கணக்கில் ஆ,ட்டம் சமனில் முடிந்தது. 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதன் முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் கேரளாவை தோற்கடித்து முதல்முறையாக ஐ.எஸ்.எல். சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 18 கோல்கள் அடித்து முதலிடம் பிடித்த ஐதராபாத் வீரர் ஒக்பெச்சேவுக்கு தங்க ஷூ விருது வழங்கப்பட்டது.