ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி – சென்னையை வீழ்த்தி கோவா வெற்றி

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் கோவாவின் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவாவை சந்தித்தது.

ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் கோவா அணியின் செய்மின்லென் டங்கல் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து, இரண்டாவது பாதியில் 62வது நிமிடத்தில் பெரான் கரோமினாஸ் 2வது கோல் அடித்தார். சென்னை அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

கடைசி கட்டத்தில் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் கர்லோஸ் பெனா 3வது கோல் அடித்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப் சி அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news