ஐபிஎல் போட்டியில் களம் இறங்கும் ஹர்திக் பாண்டியா!

ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் வருகிற 23-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்களிடம் ஐபிஎல் ஜுரம் தொற்றிக் கொண்டது.

இதனால் ஐபிஎல் தொடர் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோடி ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

இருவரும் தற்போது காயம் அடைந்துள்ளனர். இதனால் இந்த சீசனில் அவர்கள் இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெறவில்லை. இதனால் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக பந்து வீசிய கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் கேகேஆர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமான அணியில் இருந்து விலகினார். தற்போது அவர் உடற்தகுதி பெற்றுவிட்டார். இதனால் மும்பை அணிக்காக அவர் களம் இறங்குகிறார்.

முன்னாள் இந்திய அணி கேப்டனான சவுரவ் கங்குலி டெல்லி கேப்பிட்டலஸ் அணியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news