ஐபிஎல் பரிசு தொகை குறைப்பு! – பிசிசிஐ அதிரடி

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா வரும் 29-ந்தேதி தொடங்குகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.

8 அணிகளுக்கு இடையான போட்டியில் தரவரிசையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இதையடுத்து ஐ.பி.எல். போட்டிகளின் இறுதி ஆட்டம் மே மாதம் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாவது இடம் பிடித்த அணிக்கு ரூ. 12.5 கோடியும், 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.8.75 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான (2020) ஐ.பி.எல். பரிசுத்தொகையில் பிசிசிஐ அதிரடி மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதன்படி சாம்பியன் பட்டம் பெறும் அணி உள்பட தரவரிசையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ அறிவித்துள்ள புதிய பரிசுத்தொகை விவரத்தின் படி 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 6.25 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

அதேபோல் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 4.375 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், ஐ.பி.எல். போட்டிகளை நடத்தும் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news