ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் – டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த போட்டி தொடரில் இன்னும் எந்த அணியும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை.

இதற்கிடையே, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 57-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

கேப்டன் ரோகித் சர்மா 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரி , 2 சிக்சர்கள் அடித்தார். இந்த சிக்சர் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏ.பி.டிவில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மா 2-வது இடம் பிடித்துள்ளார்.

ரோகித் சர்மா 234 போட்டியில் 252 சிக்சருடன் 2வது இடம் பிடித்துள்ளார். அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 141 போட்டியில் 357 சிக்சருடன் முதலிடத்தில் நீடிக்கிறார். டி.வில்லியர்ஸ் 170 போட்டிகளில் 251 சிக்சருடன் 3-வது இடத்தில் உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools