ஐபிஎல் கிரிக்கெட் – 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற சிஎஸ்கே

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நேற்று தொடங்கின. முதல் தகுதிச்சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக ஐ.பி.எல். தொடர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன் 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது. இதில் 3 முறை (2010, 2011, 2018) கோப்பையை வென்று இருந்தது.

இதுவரை நடந்த 13 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் ஆடிய 11 தொடரில் 3 முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு நுழையவில்லை. 2009, 2014, 2020 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெறவில்லை. சூதாட்ட தடை காரணமாக 2016, 2017 போட்டியில் ஆடவில்லை. கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools