Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் – 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற சிஎஸ்கே

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நேற்று தொடங்கின. முதல் தகுதிச்சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக ஐ.பி.எல். தொடர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன் 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது. இதில் 3 முறை (2010, 2011, 2018) கோப்பையை வென்று இருந்தது.

இதுவரை நடந்த 13 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் ஆடிய 11 தொடரில் 3 முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு நுழையவில்லை. 2009, 2014, 2020 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெறவில்லை. சூதாட்ட தடை காரணமாக 2016, 2017 போட்டியில் ஆடவில்லை. கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை.