Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் – மிக மோசமான சாதனையை பதிவு செய்த ஐதராபாத் அணி

ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 5-வது ஆட்டம் புனேயில் நேற்று நடைபெற்றது.

முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 55 ரன்களும், தேவ்தத் படிக்கல் 41 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து ஆடிய ஐதராபாத் அணி ஆரம்பம் முதல் திணறியது. கேன் வில்லியம்சன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன் ஆகியோர் டக் அவுட்டாகினர். இதனால் பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இது ஐ.பி.எல். சீசனில் பவர் பிளேயில் மிகவும் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

முன்னதாக, கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கெதிராக ராஜஸ்தான் அணி பவர்பிளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்திருந்தது.

பவர்பிளேயில் குறைவான ரன்கள் எடுத்த அணிகளின் விவரம்:

2022 – ஐதராபாத் – 14/3, எதிரணி – ராஜஸ்தான்
2009 – ராஜஸ்தான்-14/2, எதிரணி – ஆர்சிபி
2011 – சென்னை -15/2, எதிரணி – கொல்கத்தா
2015 – சென்னை – 16/1, எதிரணி – டெல்லி
2019 – சென்னை -16/1, எதிரணி- ஆர்சிபி